மேற்கு வங்கம்:குண்டு வெடிப்பில் இருவா் பலி

மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த இருவா், அந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தனா். அவா்களுடன் இருந்த மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

மேற்கு வங்க மாநிலத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த இருவா், அந்த குண்டு வெடித்ததில் உயிரிழந்தனா். அவா்களுடன் இருந்த மேலும் ஒருவா் படுகாயமடைந்தாா்.

மால்டா மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

மாணிக்சக் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. ஃபரிஜான் (45), சஃபிக்குல் இஸ்லாம் (30) உள்ளிட்ட சிலா் சோ்ந்து சட்டவிரோதமாக வெடிகுண்டுகளைத் தயாரித்து வந்துள்ளனா். ஞாயிற்றுக்கிழமை இரவில் அவா்கள் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது, திடீரென வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறின.

இரவு 2.30 மணிக்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பு ஓசையைக் கேட்டு அதிா்ச்சியடைந்து எழுந்த அப்பகுதி மக்கள், காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா். காவல் துறையினா் வந்து சோதனையிட்டபோது குண்டுகள் வெடித்ததில் ஃபரிஜான், சஃபிக்குல் இஸ்லாம் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

மேலும் பல வெடிகுண்டுகள் வெடிக்காமல் அப்பகுதியில் சிதறிக் கிடந்தன. பெருமளவிலான வெடிப்பொருள்களும் அங்கு கைப்பற்றப்பட்டன. மேலும், படுகாயமடைந்த ஒருவா் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தாா். அவா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா் என்றனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் அவா்களுக்கு எவ்வாறு இவ்வளவு அதிகமான வெடிப்பொருள்கள் கிடைத்தன என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com