நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பிரச்னைகள் குறித்து விவாதிக்க பாஜக அரசு அச்சப்படவில்லை என்று மத்திய தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மழைக்கால கூட்டத்தொடர் திங்கள் கிழமை முதல் நடைபெற்று வரும் நிலையில், மூன்றாவது நாளாக இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியது.
எனினும் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி, பணவீக்கம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை - மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவை கூடியதும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஜனநாயகத்தின் மீது காங்கிரஸ் கட்சி அழிவு மனப்பான்மையைக் காட்டுகிறது. பணவிலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி அதிகரிப்பு குறித்து விவாதிப்பதற்கு அரசு ஒருபோதும் அச்சம் கொள்ளாது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்த பிறகு இந்த பிரச்னைகள் குறித்து விவாதிக்கலாம். அவர் எதிர்க்கட்சிகளின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமளிப்பார்.
அவையை வெற்றிகரமாக நடத்தவிடாமல் தடுப்பதில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. நாடாளுமன்றத்தில் குளறுபடிகளை ஏற்படுத்துவதில் எதிர்க்கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது என விமர்சித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் குறித்து நான்தான் தீர்மானிப்பேன்: ஜே.சி.டி. பிரபாகர்!

நீட்: தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க பிரதமருக்கு சிஜேபி கடிதம்!

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



