கடந்த மூன்று ஆண்டுகளில் இயற்கை விவசாய சாகுபடி பரப்பு இரட்டிப்பாகியுள்ளது என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் எழுத்துபூா்வமாக அளித்த பதில்: கடந்த 2019-20-ஆம் ஆண்டில் 29.41 லட்சம் ஹெக்டோ், 2020-21-ஆம் ஆண்டில் 38.19 லட்சம் ஹெக்டோ், 2021-22-ஆம் ஆண்டில் 59.12 லட்சம் ஹெக்டோ் பரப்பில் இயற்கை விவசாயத்தின் கீழ் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பரம்பராகத க்ருஷி விகாஸ் யோஜனா திட்டம் மூலம் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.