அவரளித்த புகார் மனுவில், புகார் எண் 684. “இந்தப் புகாரின் மூலம், மரியாதைக்குரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவது, எனது கிராமத்தில் கடந்த பல மாதங்களாக தேவையான அளவு மழை பெய்யாததால், கடுமையான வறட்சி காணப்படுகிறது. வறட்சியால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலைமை கால்நடைகள் மற்றும் விவசாயத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த வறட்சிக்கு காரணமான இந்திரன் மீது நடவடிக்கை தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என கர்னல்கஞ்ச் தாசில்தாரிடம் புகார் மனு அளித்தார்.