பாரதியார் பாடலை தமிழில் பாடி அசத்திய அருணாச்சல பிரதேச சகோதரிகள்: மோடி தமிழில் பாராட்டு! 

பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடலை அருணாச்சலப்பிரதேச சகோதரிகள் பாடியதைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்த பிரதமர் நரேந்திரே மோடி, அவர்களுக்கு தமிழிலேயே பாராட்டு தெரிவித்துள்ளார். 
பாரதியார் பாடலை தமிழில் பாடி அசத்திய அருணாச்சல பிரதேச சகோதரிகள்: மோடி தமிழில் பாராட்டு! 

பாருக்குள்ளே நல்ல நாடு என்ற பாரதியார் பாடலை அருணாச்சலப்பிரதேச சகோதரிகள் பாடியதைக் கேட்டு நெகிழ்ச்சி அடைந்த பிரதமர் நரேந்திரே மோடி, அவர்களுக்கு தமிழிலேயே பாராட்டு தெரிவித்துள்ளார். 

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் "பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு" என்னும் சுதந்திரப் போராட்ட பாடலை அருணாச்சலப்பிரதேச சகோதரிகள் தமிழில் பாடி அசத்தியுள்ளனர். 

இதையடுத்து பாரதியாரின் பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்னும் சுதந்திரப் போராட்ட பாடலை பாடிய அருணாச்சலப்பிரதேச சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தமிழில் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், 'இதைக் கண்டபோது நான் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன். ஒரே இந்தியா உன்னத இந்தியா கோட்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் தமிழில் பாடியுள்ள அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சக்தியின் நட்சத்திரங்களுக்கு எனது பாராட்டுக்கள்,' எனப் பதிவிட்டுள்ளார். 

அத்துடன் அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பிரேம கண்டு பதிவிட்டுள்ள விடியோ ஒன்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி ரி-ட்விட் செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com