மூத்த குடிமக்களுக்கு ரயிலில்பயணக் கட்டண சலுகை சாத்தியமில்லை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

மூத்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் பயணக் கட்டணச் சலுகை அளிப்பது சாத்தியமில்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மூத்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் பயணக் கட்டணச் சலுகை அளிப்பது சாத்தியமில்லை என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

ஏற்கெனவே, ரயில் பயணக் கட்டணம் குறைவாக உள்ளதால், பயணிகளின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டணத்தை ரயில்வே ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மக்களவையில் அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், 2019-20-ஆம் ஆண்டில் ரயில்வேக்கு கிடைத்த வருவாயை ஒப்பிடுகையில் கடந்த இரண்டு ஆண்டுகள் குறைவாகவே கிடைத்து வருகிறது.

இது ரயில்வேயின் நிதிநிலையை நீண்ட நாள்களுக்கு பாதிக்கும். ஆகையால், மூத்த குடிமக்கள் உள்பட அனைவருக்கும் மீண்டும் பயணக் கட்டணச் சலுகை அளிப்பது சாத்தியமில்லை. தற்போதைய சூழ்நிலையிலும், மாற்றுத் திறனாளிகள், 11 வகையிலான உடல்நிலை பாதிக்கப்பட்டோா் மற்றும் மாணவா்களுக்கு பயணக் கட்டணச் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com