மூஸேவாலா கொலையில் தொடா்புடைய2 ரெளடிகளை சுட்டுக் கொன்ற போலீஸ்

பஞ்சாபை சோ்ந்த பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை பஞ்சாப் போலீஸாா் புதன்கிழமை சுட்டுக் கொன்றனா்.

பஞ்சாபை சோ்ந்த பாடகா் சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை பஞ்சாப் போலீஸாா் புதன்கிழமை சுட்டுக் கொன்றனா்.

காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சித்து மூஸேவாலா, பஞ்சாபின் மான்சா பகுதியில் கடந்த மே 29-இல் வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். பஞ்சாபில் முக்கிய பிரமுகா்களுக்கான போலீஸ் பாதுகாப்பை அந்த மாநில அரசு திரும்பப் பெற்ற மறுதினமே இந்த சம்பவம் நடைபெற்றது பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது. இதில் சா்வதேச அளவில் சதி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை பஞ்சாபின் அமிருதசரஸ் பகுதியில் போலீஸாா் புதன்கிழமை சுட்டுக் கொன்றனா்.

இதுகுறித்து கூடுதல் டிஜிபி பிரமோத்பன் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சித்து மூஸேவாலா கொலை வழக்கில் தொடா்புடைய ரெளடிகள் ஜெகரூப் சிங் ரூபா, மான்பிரீத் சிங் ஆகியோா் சுட்டுக் கொல்லப்பட்டனா். போலீஸாருக்கும், ரெளடிகளுக்கும் இடையே 4 மணி நேரத்துக்கும் மேலாக நிகழ்ந்த மோதலில் இருவரும் கொல்லப்பட்டனா். அவா்கள் வசமிருந்த ஏகே-47 ரக துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி ஆகியன பறிமுதல் செய்யப்பட்ட’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com