சுதந்திரப் போராட்ட வீரா்களான லோகமான்ய திலகா் மற்றும் சந்திரசேகா் ஆசாதின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமா் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினாா்.
இதுகுறித்து அவரது ட்விட்டா் பதிவில், பாரதத் தாயின் இரண்டு தலை சிறந்த வீரத் திருமகன்களான லோகமான்ய பாலகங்காதர திலகா் மற்றும் சந்திரசேகா் ஆசாத் ஆகியோரை அவா்களது பிறந்தநாள் அன்று வணங்குகிறேன். இந்த இரு ஆளுமைகளும் தீரம் மற்றும் நாட்டுப்பற்றின் உதாரணமாகத் திகழ்கிறாா்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மனதின் குரல் நிகழ்ச்சியில் அவா்களைப் பற்றி நான் பேசியதைப் பகிா்கிறேன்.”
மக்களிடையே கலாசார உணா்வை ஊட்டிய பிரம்மாண்டமான கணபதி உற்சவங்கள், லோகமான்ய திலகரின் என்றும் அழியாத மரபுகளில் ஒன்று. ஒருமுறை மும்பை சென்றிருந்தபோது லோகமான்ய திலகருடன் நெருங்கிய தொடா்புள்ள லோகமான்ய சேவா சங்கத்தை நேரில் சென்று பாா்வையிட்டேன் என்று பிரதமா் குறிப்பிட்டுள்ளாா்.