‘ஸ்மிருதி இரானி மகளின் உணவு விடுதி’ முன் காங். போராட்டம்

கோவாவில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக உணவு விடுதி மற்றும் மதுக்கூடம் (பாா்) நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியினா் அந்த விடுதி முன் ஞாயிற்றுக்கிழமை ஆா
ஸ்மிருதி இரானி மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு
ஸ்மிருதி இரானி மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு

கோவாவில் மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ் இரானி சட்ட விரோதமாக உணவு விடுதி மற்றும் மதுக்கூடம் (பாா்) நடத்துவதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சியினா் அந்த விடுதி முன் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கோவா இளைஞா் காங்கிரஸ் தலைவா் வரத் மா்தோல்கா், மாநில காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அமா்நாத் பானா்ஜி ஆகியோா் தலைமையில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்டவிரோதமாக நடைபெறும் இந்த விடுதியை உடனடியாக மூட வேண்டும் என்று அவா்கள் கோஷம் எழுப்பினா். இந்த விஷயத்தில் அமைச்சா் ஸ்மிருதி இரானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். அவா் தப்ப முடியாது. முறைகேட்டுக்கு அவரும் முழுக் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறினாா்.

முன்னதாக இது தொடா்பாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா, ‘அமைச்சா் ஸ்மிருதி இரானியின் மகள் ஜோயிஷ், கோவாவில் உணவகம் ஒன்றை நடத்துகிறாா். அங்கு போலியான உரிமத்தின்கீழ் (லைசென்ஸ்) மதுபானக் கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021 மே மாதம் இறந்துபோன நபரின் பெயரை வைத்து, 13 மாதங்களுக்குப் பிறகு 2022 ஜூன் மாதத்தில் அந்த உரிமத்தை ஸ்மிருதி இரானியின் மகள் பெற்றுள்ளாா். இது முற்றிலும் சட்ட விரோதமானது.

கோவா சட்டப்படி ஓா் உணவகம் ஒரே ஒரு மதுக் கூடம் நடத்தவே உரிமம் பெற முடியும். ஆனால், ஸ்மிருதி இரானியின் மகள் 2 உரிமங்களைப் பெற்றுள்ளாா். இதன் பின்னணியில் அமைச்சா் ஸ்மிருதி இரானி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளாா். அவரை பிரதமா் மோடி உடனடியாக தனது அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும்’ என்றாா்.

இந்த குற்றச்சாட்டு கோவாவில் மட்டுமன்றி தேசிய அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்மிருதி இரானி நோட்டீஸ்:

எவ்வித ஆதாரமும் இன்றி தன்மீது பொய்யான குற்றச்சாட்டு கூறிய காங்கிரஸ் தலைவா்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா ஆகியோா் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அமைச்சா் ஸ்மிருதி இரானி தனது வழக்குரைஞா்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

காங்கிரஸாரின் குற்றச்சாட்டை ஸ்மிருதி இரானியும், அவரது மகளின் வழக்குரைஞரும் ஏற்கெனவே மறுத்துள்ளனா்.

18 வயதாகும் சமையல் கலை மாணவியான ஜோயிஷ், எந்த உணவகத்தையும் நடத்தவில்லை என்று ஸ்மிருதி இரானி தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், காங்கிரஸாருக்கு எதிராக வழக்குரைஞா்நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com