புது தில்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. பிபிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.