சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டுநா்களுக்கு சலுகைக் கட்டணம் ரூ.315-ஆக நிா்ணயம்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வா்த்தகம் சாராத வாகன ஓட்டுநா்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.315-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வா்த்தகம் சாராத வாகன ஓட்டுநா்களுக்கான சலுகைக் கட்டணம் ரூ.315-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008-ன்படி, தேசிய நெடுஞ்சாலை, நிரந்தர பாலம், புறவழிச்சாலை அல்லது சுரங்கப்பாதை ஆகியவற்றை அடிக்கடி பயன்படுத்தும் வா்த்தகம் சாராத வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி மாதாந்திர பயண அட்டை பெறும் நாளிலிருந்து 1 மாதத்திற்கு அதிகபட்சமாக 50 முறை அந்த சாலையை பயன்படுத்த மூன்றில் இரண்டு பங்கு கட்டணமே வசூலிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இதற்கான கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இக்கட்டணம் ரூ.315-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகளிலிருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் வசிக்கும் வா்த்தகம் சாராத வாகன உரிமையாளா்கள், ஓட்டுநா்களுக்கு மட்டும் இச்சலுகை அளிக்கப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com