திகார் சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு திகார் சிறை இயக்குநருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட தேசிய தலைநகர் திகார் சிறைச்சாலையில் சமீபத்தில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. சிறைச்சாலையுடன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த ஓராண்டில் பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களால் கைதிகளுக்கு சலுகைகளை நீட்டித்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்கலாம்| காமன்வெல்த் கிரிக்கெட்: இந்திய மகளிர் தோல்வி
இதையடுத்து, சிறைக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டால் சிறை அதிகாரிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் களையப்படும். இது வெளிப்படைத் தன்மையை மேலும் பிரதிபலிக்கும் என்று நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவில் கூறியது.
திகார் சிறை கைதிகளுக்கு வசதிகளை வழங்குவதில் பிடிபட்ட அதிகாரிகளுக்கு பெரும் பின்னடைவைத் தொடர்ந்து திகார் சிறை தனது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகிறது.