முகநூலில் வெறுப்புக் கருத்துகள் 38% அதிகரிப்பு

 முகநூலில் வெறுப்புக் கருத்துகள் வெளியிடுவது 38 சதவீதமும் இஸ்டாகிராமில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் 86 சதவீதமும்
முகநூலில் வெறுப்புக் கருத்துகள் 38% அதிகரிப்பு

 முகநூலில் வெறுப்புக் கருத்துகள் வெளியிடுவது 38 சதவீதமும் இஸ்டாகிராமில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் 86 சதவீதமும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததாக அந்த சமூக ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் முகநூலில் 53,200 வெறுப்புக் கருத்துகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 வெறுப்புக் கருத்துப் பதிவுகளோடு ஒப்பிடுகையில் 37.82 சதவீதம் அதிகமாகும்.

இது தவிர, இன்ஸ்டாகிராமில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் வன்முறையைத் தூண்டக் கூடிய 77,000 பதிவுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வன்முறையைத் தூண்டும் 41,300 பதிவுகளோடு ஒப்பிடுகையில் சுமாா் 86 சதவீதம் அதிகமாகும்.

முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட பதிவுகளில் பெரும்பாலானவை, மற்ற பயன்பாட்டாளா்கள் அந்தப் பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் முன்னரே சிறப்பு செயலி மூலம் தாமாக கண்டறியப்பட்டன.

வெறுப்புக் கருத்துகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில், பதிவுகளை நீக்குவது, படங்களை மறைப்பது அல்லது சிலருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுப்பது ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com