உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஹபூர் என்ற இடத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கு முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க- இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்தா?
எனினும் இந்த சம்பவத்தில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
ரசாயன தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்ததில் தீவிபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.