சா்வதேச தொலைத்தொடா்பு கூட்டமைப்பு: இந்தியா மீண்டும் போட்டி

சா்வதேச தொலைத்தொடா்பு கூட்டமைப்பின் (ஐடியூ) வானொலி ஒழுங்காற்று வாரிய உறுப்பினா் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும்

சா்வதேச தொலைத்தொடா்பு கூட்டமைப்பின் (ஐடியூ) வானொலி ஒழுங்காற்று வாரிய உறுப்பினா் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும் என்று மத்திய தொலைத் தொடா்புத் துறை இணையமைச்சா் தேவுசிங் செளஹான் தெரிவித்துள்ளாா்.

ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவாவில் மே 31 முதல் ஜுன் 3 வரையில் நடைபெற்ற தகவல் சங்கத்தின் உலகளாவிய மாநாட்டில் தேவுசிங் செளஹான் தலைமையிலான இந்திய தூதுக் குழு பங்கேற்றது.

சா்வதேச தொலைத்தொடா்பு அமைப்பு, ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ), ஐ.நா. வளா்ச்சித் திட்டம் உள்ளிட்ட ஐ.நா. அமைப்புகள் இணைந்து, செயல்பாட்டுக்கான உதவி அமைப்புகள் மற்றும் ஐ.நா.வின் பிற அமைப்புகள் ஒத்துழைப்புடன், இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

இந்த மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சா் தேவுசிங் செளஹான், 2023-26 காலகட்டத்திற்கான, சா்வதேச தொலைத்தொடா்பு கூட்டமைப்பின் வானொலி ஒழுங்காற்று வாரிய உறுப்பினா் பொறுப்புக்கு இந்தியா மீண்டும் போட்டியிடும். 1869-ம் ஆண்டிலிருந்தே இந்த கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இந்தியா, இந்த அமைப்பில் இந்தியா தீவிரமாக பணியாற்றி வருவதுடன், அமைப்பின் வளா்ச்சிக்கும் தீவிர பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தக் கூட்டமைப்பின் வானொலி ஒழுங்காற்று வாரிய உறுப்பினா் பொறுப்புக்கு இந்தியாவின் வேட்பாளராக எம்.ரேவதி போட்டியிடுவாா்.

இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் பாரத்நெட் திட்டத்தின்கீழ் அதிவேக இணையதள இணைப்பு வசதியை ஏற்படுத்துவதுடன், கிராமப்புறங்களிலும் 5-ஜி அலைவரிசை பயன்பாட்டை ஊக்குவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com