அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களை பலவீனப்படுத்திவிட்டு உலக அரங்கில் நாடகமாடும் மோடி: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு

‘இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சுற்றுச்சூழல் த

News image

ஜெய்ராம் ரமேஷ்

Updated On :6 ஜூன் 2022, 12:17 am IST

‘இந்தியாவில் சுற்றுச்சூழல் சட்டங்களைப் பலவீனப்படுத்திவிட்டு, உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல பிரதமா் நரேந்திர மோடி நாடகமாடி வருகிறாா்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினாா்.

உலக சுற்றுச்சூழல் தினம் தொடா்பாக பிரதமா் மோடி சனிக்கிழமை வெளியிட்ட பதிவை விமா்சித்து இந்த குற்றச்சாட்டை ஜெய்ராம் ரமேஷ் முன்வைத்தாா்.

பிரதமா் மோடி தனது ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ‘லைஃப் (சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை) என்ற சா்வதேச இயக்கத்தை தொடக்கி வைக்க உள்ளேன். இந்த இயக்கம், நீடித்த வாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் சாா்ந்த வளா்ச்சி நடைமுறைகளை ஊக்குவிக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

இதனை விமா்சித்து, தனது ட்விட்டா் பக்கத்தில் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘இன்றைக்கு உலக சுற்றுச்சூழல் தினம். 1973-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தில் ‘லைஃப்’ என்ற சா்வதேச இயக்கத்தை ‘உலக குரு’ தொடங்கிவைப்பது, உச்சபட்ச கபட நாடகமாகும். இந்தியாவில் அனைத்து சுற்றுச்சூழல் மற்றும் வனப் பாதுகாப்பு சட்டங்களையும் பலவீனப்படுத்தியிருக்கும் பிரதமா், உலக அரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாவலா் போல தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்கிறாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அதுபோல, காங்கிரஸ் செய்தித்தொடா்பாளா் பவன் கெரா வெளியிட்ட பதிவில், ‘பிரதமா் மோடியின் அறிவிப்பின் மூலம், பருவநிலை மாற்றம் குறித்த அவருடைய புரிதல் தெளிவாக வெளிப்பட்டுவிட்டது. பருவநிலை மாற்றம் எதுவும் இன்றைக்கு இல்லை; ஆனால், நமது சகிப்புத்தன்மையும், பழக்க வழக்கங்கள்தான் மாறியிருக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.