மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சியோலில் இரவு நேர சுரங்கப்பாதை சேவை ஆகஸ்டில் மீண்டும் தொடக்கம்

சியோலில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் இரவு நேர சுரங்கப்பாதை சேவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது. 

News image

dgl_subway_0310chn_66_2

Updated On :6 ஜூன் 2022, 6:23 am

சியோலில் உள்ள அனைத்து சுரங்கப்பாதைகளிலும் இரவு நேர சுரங்கப்பாதை சேவைகள் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்க உள்ளது. 

கரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இரவு நேர சுரங்கப்பாதை செயல்படாத நிலையில், தற்போது மீண்டும் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை ஆப்ரேட்டர்கள் இன்று வெளியிட்டனர். 

தலைநகரில் உள்ள சுரங்கப்பாதை சேவைகளின் ஆபரேட்டர்களான சியோல் மெட்ரோ மற்றும் கோரைலின் கூற்றுப்படி, 

வார நாளில் லைன் 1 இன் இயக்க நேரம் ஜூலை 1 முதல் நள்ளிரவு அதிகாலை 1 மணி வரை நீட்டிக்கப்படும், அதே நேரத்தில் 3 மற்றும் 4 லைன் ஆகஸ்ட் 1 முதல் தொடங்கும் என்று யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில், சுரங்கப்பாதை சேவைகள் முன்பு போலவே நள்ளிரவு வரை இயங்கும்.

லைன் 2 மற்றும் லைன் 5-8 ஆகியவை செவ்வாய்க்கிழமை தாமதமாகச் சேவையைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தலைநகர் பகுதியில் நான்கு வழி ரயில் பாதைகள், சுயின்-பண்டாங் லைன் உள்பட, ஜூலை 1 ஆம் தேதி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று சேவை ஆபரேட்டர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.