அஸ்ஸாமில் அமைச்சரவை நாளை (ஜூன் 9) மாற்றியமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ நாளை (ஜூன் 9) குவஹாட்டியில் ஸ்ரீமந்த சங்கரதேவ் சர்வதேச அரங்கத்தில் மதியம் 3 மணியளவில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். அதில் பாஜகவைச் சேர்ந்த 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்” என்றார்.
முன்னதாக அஸ்ஸாம் மாநில முதல்வர், மலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இடம் பெறுவார் எனக் கூறியிருந்தார். முதல் முறையாக ஹிமந்தா பிஸ்வாஷ் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஹிமந்தா பிஸ்வாஷ் சர்மா கடந்த ஆண்டு மே 10ஆம் நாளில் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஷ் சர்மா நேற்று (ஜூன் 7) துணை ஆணையர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு விரைவில் வரவிருக்கிற துணை ஆணையர்கள் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.