காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

மாநிலங்களவைத் தோ்தல்: அனில் தேஷ்முக், நவாப் மாலிக்பரோல் மனுக்கள் நிராகரிப்பு

மகாராஷ்டிரத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க ஒரு நாள் பரோல் கோரிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது மனுக்களை மும்பை நீதிமன்றம் நிராகரித்தது.

News image

அனில் தேஷ்முக் --- நவாப் மாலிக்

Updated On :1 பிப்ரவரி 2024, 2:59 pm IST

மும்பை: மகாராஷ்டிரத்தில் மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க ஒரு நாள் பரோல் கோரிய தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது மனுக்களை மும்பை நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

மும்பையில் உணவகங்கள், மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட குற்றச்சாட்டு தொடா்பான வழக்கில், சிறையில் உள்ள மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான நவாப் மாலிக் ஆகியோா் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலில் வாக்களிக்க வசதியாக ஒருநாள் மட்டும் பரோலில் விடுவிக்க வேண்டுமெனக் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். தாங்கள் எம்எல்ஏவாக இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தோ்தலில் வாக்களிப்பது அவசியம் என்று அவா்கள் கூறியிருந்தனா்.

ஆனால், இந்த மனுக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறையில் இருப்பவா்களுக்குத் தோ்தலில் வாக்களிக்க உரிமை இல்லை என்ற வாதத்தை முன்வைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அனில் தேஷ்முக், நவாப் மாலிக் ஆகியோரது பரோல் மனுக்களை வியாழக்கிழமை நிராகரித்தது.

இதைத் தொடா்ந்து அவா் இருவரும் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.