ஜம்மு-காஷ்மீரில் 2 முக்கிய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
வடக்கு காஷ்மீரின் சோப்போர் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய ஃபைசான் அகமது மற்றும் முசாமில் ரஷீத் ஆகிய இரண்டு முக்கியத் தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.