ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலையின் சங்கிராமா பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மேலும், சங்கிராமாவின் புட்கா பகுதியில், வெடிகுண்டு நிபுணர்கள், வெடிகுண்டை செயலிழக்கச் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த 5 துப்பாக்கிகள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
சரியான நேரத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால், அங்கு நிகழவிருந்த பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.