ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முயற்சி: லண்டன் கண்காட்சியில் பங்கேற்பு

 ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக லண்டனில் ஜூன் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற ஒயின் கண்காட்சியில் இந்தியா பங்கேற்றது.

 ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக லண்டனில் ஜூன் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற ஒயின் கண்காட்சியில் இந்தியா பங்கேற்றது.

வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சியால், 10 இந்திய ஒயின் ஏற்றுமதியாளா்கள் லண்டன் ஒயின் கண்காட்சியில் பங்கேற்றனா்.

ஒயின் தொடா்பான உலகின் மிக முக்கியமான வணிக சந்தையாக லண்டன் ஒயின் கண்காட்சி கருதப்படுகிறது.

ரெஸ்வேரா ஒயின்ஸ், சுலா ஒயின் யாா்ட்ஸ், குட்டிராப் ஒயின் செல்லா்ஸ், ஹில் ஜில் ஒயின்ஸ் உள்ளிட்ட இந்திய ஒயின் ஏற்றுமதியாளா்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனா்.

உலக அளவில் மதுபானங்களுக்கான ஏற்றுமதி சந்தையில் 3-வது பெரிய நாடாக இந்தியா இருப்பதால், தானியங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 33,919 கிலோ லிட்டா் மதுபானம் தயாரிக்க உரிமம் பெற்ற 12 நிறுவனங்கள் உள்ளன. இவை இந்திய அரசின் உரிமம் பெற்று 56 யூனிட் பீா் மதுவகையும் தயாரிக்கின்றன.

2020-21-ம் ஆண்டில், இந்தியா, 2,500 கோடி மதிப்பிலான 2.47 லட்சம் மெட்ரிக் டன் மதுபானப் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், கானா, கேமரூன், காங்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு மதுபானங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com