ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக, மூத்த வெளியுறவு அதிகாரி ருசிரா கம்போஜ் செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டார்.
தற்போது அந்தப் பொறுப்பை வகித்து வரும் டி.எஸ்.திருமூர்த்திக்குப் பதிலாக அவர் அந்தப் பதவியை ஏற்கவுள்ளார்.
1987-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியான அவர், தற்போது பூடானுக்கான இந்தியத் தூதராக இருந்து வருகிறார். ஐ.நா.வுக்கான இந்தியத் தூதராக ருசிரா கம்போஜ் கூடிய விரைவில் பொறுப்பேற்பார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.