யஷ்வந்த் சின்ஹவுக்கு ஓவைசி கட்சி ஆதரவு: குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு அசாதுதீன் ஓவைசியின் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 17 கட்சிகள் இணைந்து பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹவை நிறுத்தியுள்ளனர்.
புது தில்லியில் இன்று தேர்தல் அதிகாரியான மாநிலங்களவை செயலரிடம், யஷ்வந்த் சின்ஹா இன்று காலை தனது வேட்புமனுவை அளித்தார்.
இந்நிலையில், யஷ்வந்த் சின்ஹவுக்கு அதரவளிப்பதாக ஓவைசி அறிவித்துள்ளார். இதுகுறித்து ஓவைசி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹவுக்கு வாக்களிப்பார்கள். முன்னதாக சின்ஹ என்னுடன் தொலைபேசியில் பேசினார்.” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. குடியரசுத் தலைவா் தோ்தல்: எதிா்க்கட்சிகளின் கணக்கு
முன்னதாக, யஷ்வந்த் சின்ஹவுக்கு தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.