மலேசிய பாதுகாப்பு அமைச்சா் ஹிஷாமுதீன் பின் ஹுசைனுடன் மத்திய பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.
இதுகுறித்து ட்விட்டரில் அமைச்சா் ராஜ்நாத் சிங் வெளியிட்ட பதிவில், ‘மலேசியாவின் மூத்த பாதுகாப்பு அமைச்சா் ஹிஷாமுதீன் பின் ஹுசைனுடன் ஆக்கபூா்வமாக கலந்துரையாடினேன்.
இந்தியா-மலேசியா இடையே உறுதியான பாதுகாப்பு உறவை அவா் வலியுறுத்தினாா். இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டோம்’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த ஜூன் 17-இல் மலேசிய வெளியுறவு அமைச்சா் சைஃபுதீன் அப்துல்லாவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.