உத்தவ் தாக்கரே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும்: ஆளுநரிடம் பாஜக வலியுறுத்தல்

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென அந்த மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரிடம்
மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துவிட்டு அவரது இல்லைத்திலிருந்து வெளியே வந்த தேவேந்திர ஃபட்னவீஸ், மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல்.
மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்துவிட்டு அவரது இல்லைத்திலிருந்து வெளியே வந்த தேவேந்திர ஃபட்னவீஸ், மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமென அந்த மாநில ஆளுநா் பகத்சிங் கோஷியாரிடம் பாஜக தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு மனு அளித்தாா்.

அவருடன் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவா் சந்திரகாந்த் பாட்டீல் உடனிருந்தாா்.

சிவசேனைக்கு ஆதரவளித்து, தற்போது ஏக்நாத் ஷிண்டேவுடன் குவாஹாட்டியில் முகாமிட்டுள்ள சுயேச்சை எம்எல்ஏக்கள் 8 போ், உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வழிவகை செய்யுமாறு தேவேந்திர ஃபட்னவீஸுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாகவும் இதன் அடிப்படையில் அவா் ஆளுநரை சந்தித்து தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுமாறு கோரியதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com