உக்ரைனிலிருந்து திரும்பிய 180 மாணவர்கள் இன்று கேரளம் வருகை: பினராயி விஜயன்

உக்ரைனிலிருந்து திரும்பிய 180 மாணவர்கள் இன்று மாலை 4 மணிக்கு தில்லியிலிருந்து ஏர் ஆசியா விமானம் மூலம் அழைத்துவரப்படுவார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 
உக்ரைனிலிருந்து திரும்பிய 180 மாணவர்கள் இன்று கேரளம் வருகை: பினராயி விஜயன்

உக்ரைனிலிருந்து திரும்பிய 180 மாணவர்கள் இன்று மாலை 4 மணிக்கு தில்லியிலிருந்து ஏர் ஆசியா விமானம் மூலம் அழைத்துவரப்படுவார்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

முதல்வர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 

கேரள அரசால் மாலை 4 மணிக்கு ஏர் ஆசியா இந்தியா விமானத்தில் 180 மாணவர்கள் தில்லியிலிருந்து கொச்சிக்கு அழைத்து வரப்படுகிறார்கள். உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய அனைத்து கேரள மக்களும் பாதுகாப்பாக அழைவருவதை நாங்கள் உறுதி செய்கிறோம் என்றார். 

செவ்வாயன்று கேரளத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திங்கள்கிழமை மாலை உக்ரைனிலிருந்து வந்ததாகவும், அவர்களில் 25 பேர் கொச்சிக்கும், மீதமுள்ளவர்கள் திருவனந்தபுரத்திற்கும் புறப்பட்டனர் என்று கேரள அரசு பதிவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com