2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

இந்திய மாணவர் உயிரிழப்பின் தாக்கம்: கர்நாடகத்திலும் நீட் எதிர்ப்புக் குரல்

உக்ரைனில் ரஷியத் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்ததையடுத்து, அந்த மாநிலத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :2 மார்ச் 2022, 2:45 pm

DIN


உக்ரைனில் ரஷியத் தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர் உயிரிழந்ததையடுத்து, அந்த மாநிலத்தில் நீட் தேர்வுக்கான எதிர்ப்புக் குரல் எழுந்துள்ளது.

உக்ரைனில் தொடர்ந்து 7-வது நாளாக ரஷியா தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இந்தியாவில் மருத்துவம் படிக்க முடியாமல்போனதன் காரணத்தினாலேயே அவர் உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்றதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுபற்றிய அவரது ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  

"நடுத்தர மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நீட் தேர்வு சிதைக்கிறது. இல்லாதவர்களை நிராகரித்து இருப்பவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி ஒதுக்கப்படுகிறது. நவீன் மரணம் நீட் தேர்வின் அடிப்படை நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்செடுத்து பணக்காரர்களுக்கு உதவும் மருத்துவக் கல்வி முறை நாட்டின் அவமானம்.

நீண்ட காலமாக புதிய கல்விக் கொள்கை குறித்து தற்பெருமை பேசும் மத்திய அரசானது, ஒருமுறையாவது மனதிலிருந்து சிந்திக்க வேண்டும்."

இந்தப் பதிவுடன் நீட் தேர்வை நிறுத்த வேண்டும் என்ற ஹேஷ்டேக்கையும் குமாரசாமி இணைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.