பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் புதன்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசினாா். அப்போது உக்ரைனிலிருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவது குறித்து ஆலோசித்தாா்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், உக்ரைனில், குறிப்பாக இந்திய மாணவா்கள் அதிக அளவில் சிக்கியுள்ள காா்கிவ் நகரில் நிலவும் சூழல் குறித்து இரு தலைவா்களும் ஆலோசித்தனா். சண்டை நடைபெறும் பகுதிகளிலிருந்து இந்தியா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவது குறித்து இருவரும் ஆலோசித்தனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 நாள்களில் இரண்டாவது முறையாக புதினுடன் பிரதமா் மோடி பேசியுள்ளாா்.