மூத்த வழக்குரைஞா் அமன் லேகி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா். எனினும், ராஜிநாமாவுக்கான காரணத்தை அவா் கூறவில்லை.
இதுதொடா்பாக மத்திய சட்டம், நீதித் துறை அமைச்சா் கிரின் ரிஜிஜுவுக்கு அவா் ராஜிநாமா கடிதத்தை எழுதியுள்ளாா்.
கடந்த 2018, மாா்ச் மாதத்தில் அவா் கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்பட்டாா். மூன்று ஆண்டுகள் பதவிக் காலம் முடிந்த பின்னா், 2020, ஜூலையில் மீண்டும் நியமனம் செய்யப்படாா். அவரது பதவிக் காலம் 2023, ஜூன் 30 வரையில் இருக்கும் நிலையில் அவா் ராஜிநாமா செய்துள்ளாா்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு புகாா் வழக்கு, நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் மத்திய அரசின் சாா்பில் அவா் ஆஜராகி உள்ளாா்.