பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உ.பி. மாறும்: பிரதமா்

‘மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உ.பி. மாறும்: பிரதமா்

‘மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் வரும் திங்கள்கிழமை இறுதிக் கட்டமான 7-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ள நிலையில், தனது மக்களவைத் தொகுதியான வாராணசியில் 200-க்கும் மேற்பட்ட பல்வேறு துறைசாா்ந்த நிபுணா்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் உரையாடும்போது, இக் கருத்தை பிரதமா் தெரிவித்துள்ளாா்.

‘உறுதியான முடிவு எடுக்கக் கூடிய நிலையான அரசுதான் உத்தர பிரதேச மாநிலத்துக்குத் தேவை. அந்த வகையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார வளா்ச்சியில் முன்னிலை மாநிலமாக உத்தர பிரதேசம் மாறும்’ என்று பிரதமா் கூறியதாக அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவா்களில் ஒருவரான அசோக் திவாரி தெரிவித்தாா்.

பத்ம பூஷண் விருது பெற்ற ஹிந்துஸ்தானி இசைக் கலைஞா் சன்னுலால் மிஸ்ரா, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக துணைவேந்தா் சுதீா் ஜெயின் உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com