5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகவுள்ளன.
உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளன.
இன்று மாலை 6 மணியுடன் உத்தரப் பிரதேச மாநிலத்தின் 7ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஆய்வு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியாகவுள்ளன.