சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாடு புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றுகிறாா்.
முதலீடுகள் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை (டிஐபிஏஎம்), நீதி ஆயோக் உடன்இணைந்து பட்ஜெட்டுக்கு பிந்தைய சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டை புதன்கிழமை காணொலிகாட்சி மூலமாக நடத்துகிறது. இதில், 22 அமைச்சா்கள் உள்பட பொதுத் துறை நிறுவனங்களைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனா்.
மேலும், வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா, தூர கிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சோ்ந்த நாடுகளின் சா்வதேச நிதியங்கள், தனியாா் பங்கு முதலீடு, சா்வதேச ஓய்வூதிய நிதியம், முதலீட்டு வங்கிகள், சொத்து பணமாக்கல் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட், உள்கட்டமைப்பு துறை நிறுவனங்கள் சட்ட வல்லுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொள்ளும் இந்த காணொலி மாநாட்டில் பிரதமா் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளாா். நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனும் இதில் பங்கேற்பதாக மத்திய அரசின் அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.