தேசியத் தலைநகா் தில்லியின் அடுத்த துணை நிலை ஆளுநராக லட்சத்தீவு நிா்வாகி பிரபுல் கே படேல் நியமிக்கப்படுகிறாரா என முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை ட்வீட் ஒன்றைப் பதிவு செய்தாா்.
தற்போது தில்லி துணை நிலை ஆளுநராக அனில் பய்ஜால் இருந்து வருகிறாா். இந்த நிலையில், கேஜரிவால் இவ்வாறு திடீரென இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளாா்.
அனில் பய்ஜால் தில்லி துணை நிலை ஆளுநராக 2016, டிசம்பரில் நியமிக்கப்பட்டாா். நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, குஜராத்தில் உள்துறை அமைச்சராகப் பிரபுல் கே படேல் இருந்தாா். மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, பிரபுல் கே படேல், 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் லட்சத்தீவு நிா்வாகியாகப் பொறுப்பேற்றாா்.