முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தூய்மைப் பணியைக் கைவிட மறுக்கும் முதல்வரை வீழ்த்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ-வின் தாய்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை வீழ்த்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ லாப் சிங் உகோக்கின் தாய் அரசுப் பள்ளியில் தொடர்ந்து தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

News image

ஆம் ஆத்மி எம்எல்ஏ லாப் சிங் உகோக்

Updated On :13 மார்ச் 2022, 12:41 pm IST


பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை வீழ்த்திய ஆம் ஆத்மி எம்எல்ஏ லாப் சிங் உகோக்கின் தாய் அரசுப் பள்ளியில் தொடர்ந்து தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சன்னியை ஆம் ஆத்மி வேட்பாளர் லாப் சிங் உகோக் 37,550 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் மொபைல் சரிசெய்யும் கடையில் பணியாற்றி வந்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும், அவரது தாய் பால்தேவ் கௌர் அரசுப் பள்ளியில் தொடர்ந்து தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதுபற்றி கௌர் கூறியதாவது:

"பணம் சம்பாதிக்க நாங்கள் எப்போதுமே கடினமாகத்தான் உழைத்துள்ளோம். எனது மகனின் நிலை என்னவாக இருந்தாலும், நான் பள்ளியில் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்.

மாநிலத்தின் முதல்வருக்கு எதிராகப் போட்டியிட்டபோதும், என் மகன் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை எப்போதுமே இருந்தது."

பள்ளியின் தாளாளர் அம்ரித் பால் கௌர் கூறியதாவது:

"அவரது தாய் நீண்ட நாள்களாக இந்தப் பள்ளியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரும் இதே பள்ளியில்தான் படித்தார். சொந்த கிராமத்துக்கும் பள்ளிக்கும் அவர் நிறைய பெருமை சேர்த்துள்ளார். இந்தப் பள்ளியில் தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக அவரது தாய் கூறினார்."

அவரது தந்தை தர்ஷன் சிங் பேசுகையில், "கிராம மக்கள் அவரைத் தேர்ந்தெடுந்துள்ளனர். மக்கள் நலனுக்காகவே அவர் பணியாற்ற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் முன்பிருந்தது போலவே தொடர்ந்து வாழ்வோம்" என்றார்.

நீண்ட நாள்களாகத் தெரிந்து வரும் உகோக் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பதை கிராம மக்களால் இன்னும் நம்பமுடியவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.