ம.பி: அனுப்பூரில் கார் மரத்தில் மோதியதில் 3 பேர் பலி, 2 பேர் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கார் மரத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயமடைந்தனர். 
ம.பி: அனுப்பூரில் கார் மரத்தில் மோதியதில் 3 பேர் பலி, 2 பேர் காயம்

அனுப்பூர்:  மத்தியப் பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கார் மரத்தின் மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர், 2 பேர் காயமடைந்தனர். 

இதுகுறித்து ராஜேந்திரா காவல் நிலையம் காவல் ஆய்வாளர் நரேந்திர பால் கூறியதாவது: 

நர்மதா நதியின் அமர்கண்டக் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியளவில் ராஜேந்திரா கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது கார் ரகுந் கரவுண்டி கிராசிங்கில் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மரத்தில் மோதின வேகத்தில் கார் இரண்டாகப் பிளந்தது. 

இதில், காரில் இருந்த வர்ஷா ஸ்ரீவத்சவா (19), மனு சிங் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் காயமடைந்த சௌரப் சர்மா (22), திவ்யான்சு ஸ்ரீவஸ்தவா (22) ஆகிய. 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று நரேந்திர பால் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com