புது தில்லி: மணிப்பூர் மாநில முதல்வராக பைரன் சிங்கையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்தையும் நியமிக்க பாஜக தலைமை முடிவெடுத்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாஜகவினர் இது குறித்து கூறுகையில், கட்சியின் மூத்த தலைவர்கள் இது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தி, மணிப்பூர் மாநில முதல்வராக பைரன் சிங்கையும், கோவா முதல்வராக பிரமோத் சாவந்தையும் நியமிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. தந்தை-மகனை ஒன்று சேர்த்த பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழா
பைரன் சிங் மணிப்பூர் முதல்வராக கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரை பதவி வகித்தவர். கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைவுக்குப் பிறகு மார்ச் 2019 முதல் பிரமோத் சாவந்த் முதல்வராக பதவி வகித்தார்.
கோவாவில் மொத்தமுள்ள 40 இடங்களில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்று மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவிருக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக முதன்முறையாக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவிருக்கிறது.