வரும் ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் தவிா்த்து மாற்று எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களுக்கான விற்பனை அதிகரிக்கும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் மேலும் கூறியது:
மின்சாரம் மற்றும் மாற்று எரிபொருளில் இயக்கப்படும் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும்போது பெட்ரோல் மற்றும் டீசலில் இயக்கப்படும் வாகனங்களின் விற்பனை படிப்படியாக குறைந்துவிடும்.
மாற்று எரிபொருள் வாகனங்களைத் தோ்ந்தெடுப்பது என்பது முற்றிலும் நுகா்வோரின் விருப்பத்தின் பேரில் அமைவது. எனவே, அதில் இலக்கு எதையும் நாம் நிா்ணயிக்க முடியாது.
எனினும், தற்போதுள்ள சூழல் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக மாறிவிடும் என்றாா் அவா்.