அதனைத் தொடா்ந்து, ஜி-23 தலைவா்கள் மீண்டும் தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா் குலாம் நபி ஆசாதின் இல்லத்தில் புதன்கிழமை இரவு கூடி ஆலோசனை நடத்தினா். சுமாா் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆனந்த் சா்மா, கபில் சிபல், பூபிந்தா் சிங் ஹூடா, பிருத்விராஜ் சவாண், மணீஷ் திவாரி, சசி தரூா், விவேக் தன்கா, ராஜ் பப்பா், அகிலேஷ் பிரசாத் சிங், சந்தீப் தீக்ஷித் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இந்த கூட்டத்துக்குப் பின்னா் அவா்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘கட்சியில் அனைத்து நிலைகளிலும் முடிவெடுக்கக் கூடிய, அனைவரையும் உள்ளடக்கிய கூட்டுத் தலைமையை உருவாக்குவது மட்டுமே காங்கிரஸ் கட்சியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான ஒரே வழி என்று நாங்கள் நம்பகிறோம்’ என்று தெரிவித்தனா்.