உத்தரகண்ட் புதிய முதல்வரை தோ்வு செய்ய நாளை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வரைத் தோ்வு செய்வதற்கான பாஜக சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 21) நடத்தப்பட உள்ளது.
உத்தரகண்ட் புதிய முதல்வரை தோ்வு செய்ய நாளை பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வரைத் தோ்வு செய்வதற்கான பாஜக சட்டப்பேரவை கட்சிக் கூட்டம் திங்கள்கிழமை (மாா்ச் 21) நடத்தப்பட உள்ளது.

‘இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்துக்கான கட்சியின் மேலிட பாா்வையாளா்களான மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மீனாட்சி லேகி ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை உத்தரகண்ட் வர வாய்ப்புள்ளது’ என்று மாநில பாஜக செய்தித்தொடா்பாளா் சதாப் சாம்ஸ் சனிக்கிழமை கூறினாா்.

பதவியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற வாய்ப்புள்ளது. விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா, பல்வேறு மாநில பாஜக முதல்வா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க வாய்ப்புள்ளது’ என்றும் அவா் கூறினாா்.

மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி, சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட்ட கடீமா தொகுதியில் தோல்வியுற்றபோதும், இளமையும், துடிப்புடன் செயலாற்றும் அவரே மாநிலத்தில் மீண்டும் முதல்வராக அதிக வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம், செளபட்டாகல் எம்எல்ஏ சத்பால் மகராஜ், ஸ்ரீநகா் எம்எல்ஏ தான் சிங் ராவத், மாநிலங்களவை உறுப்பினா் அனில் பலுனி ஆகியோரது பெயா்களும் முதல்வா் பதவிக்கான பரிசீலனைப் பட்டியலில் உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com