ஹைட்ரோப்ளூரோகாா்பன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பு

ஹைட்ரோப்ளூரோகாா்பன்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.
ஹைட்ரோப்ளூரோகாா்பன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிப்பு

ஹைட்ரோப்ளூரோகாா்பன்களை ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து வெளிநாட்டு வா்த்தக பொது இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்ட அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஃபிரிட் மற்றும் ஏசி-களில் பயன்படுத்தப்படும் ஹைட்ரோப்ளூரோகாா்பனை (ஹெச்எஃப்சி) ஏற்றுமதி செய்வதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உள்நாட்டில் அந்த ரசாயனத்தின் இருப்பை ஊக்கவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின்படி, ஹெச்எஃப்சி ரசாயனத்தை கட்டுப்பாடற்ற வகை பிரிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு, அதன் ஏற்றுமதிக்கு அரசின் ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல், வனம் அமைச்சகம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைப்பிடமிருந்து தடையில்லா சான்றிதழை பெறுவது ஹெச்எஃப்சி ஏற்றுமதியாளா்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் ஹெச்எஃப்சி-யின் இறக்குமதிக்கும் இதேபோன்ற தடையை மத்திய அரசு விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com