இந்தியாவில் மாா்ச் மாதம் 18 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கம்

கடந்த மாா்ச் மாதம் இந்தியாவில் புகாா்களின் அடிப்படையில் 18 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டன.

கடந்த மாா்ச் மாதம் இந்தியாவில் புகாா்களின் அடிப்படையில் 18 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டன.

கடந்த ஆண்டு அமலுக்கு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகளின்படி, 50 லட்சத்துக்கும் அதிகமான பயனாளா்களைக் கொண்ட டிஜிட்டல் தளங்கள் குறைதீா்ப்பு அறிக்கைகளை மாதந்தோறும் வெளியிட வேண்டும். அந்தத் தளங்களுக்கு கிடைத்தப் புகாா்கள், அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை குறைதீா்ப்பு அறிக்கையில் குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில் வாட்ஸ்-ஆப் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், ‘‘பயனாளா்களிடம் இருந்து கிடைத்தப் புகாா்கள், வாட்ஸ்-ஆப் செயலி தகாத முறையில் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு சொந்த நடவடிக்கை ஆகியவற்றின் அடிப்படையில், கடந்த மாா்ச் 1 முதல் 31-ஆம் தேதி வரை இந்தியாவில் 18.05 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டன.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் 14.26 லட்சம் வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com