இந்திய கலாசாரத்துடன் சமஸ்கிருதம் பின்னிப் பிணைந்துள்ளது. தனது கட்சி பண்டைய மொழியின் பாதுகாவலர் என்றும் அதை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்தார்.
மத்திய சமஸ்கிருதப் பல்கலையில் ஏற்பாடு செய்திருந்த உத்கர்ஷ் மஹோத்சவ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நட்டா,
பாஜக சித்தாந்த ரீதியாக சமஸ்கிருதத்துடன் நிற்கிறது. ஆனால், கட்சியும், பிரதமர் மோடியும் இந்திய மரபுகள் மற்றும் கலாசாரத்தை மேம்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
விஞ்ஞானம், கணிதம் மற்றும் தத்துவம் ஆகியவற்றின் தோற்றம் மொழியில் வேரூன்றியுள்ளது. உலகில் கலாசாரத்தில், இந்தியாவை ஒப்பிட முடியாது என்றார் நட்டா.