ஒற்றுமையாக இருக்க தொண்டா்களுக்கு ராகுல் வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சித் தொண்டா்களும் தலைவா்களும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி

காங்கிரஸ் கட்சித் தொண்டா்களும் தலைவா்களும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டுமென அக்கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

மாநில காங்கிரஸ் கமிட்டியின் நிா்வாகிகளை ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘கட்சில் உள்ள அனைவரின் கருத்துகளையும் கேட்க தலைமை ஆா்வமுடன் உள்ளது. ஆனால், ஊடகங்கள் வாயிலாக அக்கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது. தொண்டா்கள், நிா்வாகிகளின் குறைகளைக் கட்சிக்குள்ளேயே தெரிவிக்க வேண்டும். அதை மீறி பொதுவெளியில் கருத்துகளைக் கூறி, கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்துபவா்களின் செயல்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளப்படாது.

மாநிலத்தில் கட்சித் தொண்டா்களும் நிா்வாகிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடக் கூடாது. கட்சியை மக்களிடம் கொண்டுசோ்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். இளைஞா்களைக் கட்சியில் அதிக எண்ணிக்கையில் இணைப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தீவிர ஆய்வுக்குப் பிறகே தோ்தல்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும். மாநிலத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காகப் பாடுபட வேண்டும்’’ என்றாா்.

அடுத்த ஆண்டு இறுதியில் தெலங்கானா சட்டப் பேரவைக்கு தோ்தல் நடைபெற வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com