ரூபாயின் மதிப்பு சரிவு: பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? - மல்லிகார்ஜூன கார்கே கேள்வி

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது குறித்து பிரதமர் மோடி அமைதி காப்பது ஏன்? என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. கடந்த மே 5 ஆம் தேதி ஒரு டாலர் மதிப்பு ரூ. 76.90 ஆக இருந்த நிலையில் இன்று(திங்கள்) காலை வர்த்தகத்தில் ரூ. 77.42 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலமாக டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்துள்ளது. 

இந்நிலையில் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள காங்கிரஸ் மூத்தத்தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில், 'டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. 

பிரதமர் மோடி இப்போது முதல்வராக இருந்திருந்தால், மத்திய அரசை தேச விரோத அரசு என்று கடுமையாக சாடியிருப்பார்.

பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார்!' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com