ஆப்கனில் பலியான இந்தியப் புகைப்படக் கலைஞர் தானிஷ் சித்திகிக்கு இரண்டாவது முறையாக புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 38 வயதான தானிஷ் சித்திக்கீ ஆப்கானிஸ்தான் கந்தஹாா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது தலிபான்கள், ஆப்கன் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் பலியானர்.
இது தொடர்பாக தலிபான்கள் மன்னிப்புக் கேட்டாலும் அமெரிக்கா தானிஷ் திட்டமிட்டே கொல்லப்பட்டார் என தலிபான்கள் மீது குற்றம் சாட்டியது.
பின், தானிஷ் மரணம் தொடர்பாக பல நாடுகளும் தலிபான்களுக்கு கண்டனம் விடுத்தனர்.
இந்நிலையில், இந்தியாவில் கரோனா மரணங்களை பதிவு செய்ததற்காக ராய்ட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த அட்னான் அபிதி, அமித் தேவே, சன்னா இர்ஷாத் மோத்தோ, மறைந்த தானிஷ் சித்திகி ஆகியோருக்கு 2022 ஆம் ஆண்டிற்கான புகைப்பட பிரிவில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தானிஷ் சித்திகிற்கு இரண்டாவது புலிட்சர் விருது ஆகும்.