குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்திய ராணுவத்தின் தளபதியாக பணியாற்றிய எம்.எம்.நரவாணே கடந்த மாதத்துடன் ஓய்வுபெற்றார். தொடர்ந்து, 29வது தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் ராம்நாத் கோவிந்தை இன்று நேரில் சந்தித்த மனோஜ் பாண்டே, எல்லைப் பிரச்னைகள் குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.