சாங்லாங்: அருணாச்சலப் பிரதேசத்தின் தெற்கு சாங்லாங்கில் வெள்ளிக்கிழமை நண்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தெற்கு சாங்லாங் பகுதியிலிருந்து தெற்கே 222 கிமீ தொலைவில் 120 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தின் தரம்ஷாலாவிலிருந்து 57 கிமீ வட-வடமேற்கில் இன்று காலை 7.46 மணியளவில் 3.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.