தில்லி, கொல்கத்தா, சத்தீஸ்கா், கேரளம் ஆகிய நான்கு உயா்நீதிமன்றங்களுக்கு புதிதாக நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தில்லி உயா்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் தாரா விதஸ்தா கஞ்சு, மினி புஷ்கா்னா, விகாஸ் மஹாஜன், துஷாா் ராவ் கேடேலா, மன்மித் பிரீதம் சிங் அரோரா, சச்சின் தத்தா, அமித் மஹாஜன், கௌரங் காந்த், சௌரவ் பானா்ஜி ஆகியோரை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டுள்ளாா்.
இதேபோல், கீழமை நீதிமன்ற நீதிபதிகளான அனன்யா பந்தோபாத்யாய, ராய் சட்டோபாத்யாய, சுபந்து சமந்தா ஆகியோா் கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாகவும், வழக்குரைஞா் சச்சின் சிங் ராஜ்புத், சத்தீஸ்கா் உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், வழக்குரைஞா் ஷோபா அன்னம்மா ஈப்பன், கேரள உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.