வாரணாசி ஞானவாபி மசூதி சர்ச்சைக்கு மத்தியில் காசியின் அனைத்து இடங்களிலும் சிவன் நிறைந்திருக்கிறார் என கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
கங்கனா ரணாவத்தின் 'தாக்கட்' (dhaakad) படம் நாளை ( மே-20) வெளிவர இருப்பதையொட்டி புதன்கிழமை காசி விஸ்வநாத் கோயிலுக்குச் சென்றுள்ளார். அங்கு சிறப்பு கங்கை தீபத்தை ஏற்றினார்.
பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதா் கோயிலின் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் இஸ்லாமியா்கள் தொழுகைக்கு முன்பாக கை, கால்களை சுத்தம் செய்யும் பகுதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான சர்சைக்கு மத்தியில் கங்கனா ரணாவத் புதன் கிழமை கூறியுள்ளதாவது:
“எப்படி மதுரா முழுவதும் ஸ்ரீ கிருஷ்ணரும் அயோத்யா முழுவதும் ஸ்ரீ ராமரும் இருக்கிறார்களோ அப்படித்தான் காசியின் அனைத்து இடங்களிலும் சிவன் இருக்கிறார். அவருக்கு உருவம் தேவை இல்லை”